நாட்டில் கடும் வெயிலால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பா நாடு:
பொதுவாக குளிர் காலம், மழைக்காலம், வெயில் காலம் போன்ற சீசன்கள் குறிப்பிட்ட மாதங்களில் இருந்து வருகிறது. இதில் மக்கள் குளிர் காலம், மழைக்காலம் சீசன்களை கூட சமாளித்து விடுவார்கள். ஆனால் வெயில் காலத்தை மட்டும் மக்கள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
தொடர்ந்து மோசமாகும் நிலைமை., ஆபத்தின் விளிம்பில் மக்கள்! டெல்லியில் அதிகரிக்கும் பரபரப்பு!!
அதற்கு காரணம் வெப்பத்தால் ஏற்படும் வறட்சி மற்றும் நோய்கள் போன்றவை மக்களின் உயிர்களை பறித்து வருகிறது. அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் இப்ப ஐரோப்பா நாட்டில் நடந்துள்ளது. ஆமாங்க சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் கிட்டத்தட்ட 15000 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் சில நாடுகள் வெப்பத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டால், இதை விட பல மடங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களால் மக்கள் அதிக அளவில் இறக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.