தமிழகத்தில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தலைவர்கள் தினங்களில் எவ்விதமான அசம்பாவிதங்களும் ஈடேறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி ஆலயத்தில் 67வது உற்சவ திருவிழா நாளை (மே 12) முதல் மே 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இத்திருவிழாவில் சட்ட ஒழுங்கு பிரச்சினை அரங்கேறாத வண்ணம் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மே 11) மாலை 06.00 மணி முதல் 14ம் தேதி காலை 06.00 மணி வரை 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக இம்மாவட்டத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடுவதற்கு அனுமதி இல்லை. இது போக கம்பு, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வர கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
திருமணமான புதிதில் இறந்துபோன விவேக் எப்படி இருக்காருன்னு பாருங்க.., போட்டோ வைரல்!!!
ஆனாலும் இத்தடை உத்தரவு பள்ளி, கல்லூரி வாகனம், அத்தியாவசிய பொருள் வாகனம், சுற்றுலா வாகனம் உள்ளிட்டவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.