கேரளாவில் கிட்டத்தட்ட ஏழு பேரை கொடூரமாக கொன்று மக்களுக்கு பீதியை கிளப்பிய அரிக்கொம்பம் யானையை வனத்துறையினர் கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். இதையடுத்து அந்த யானையை தமிழக – கேரள எல்லை பகுதியில் இருக்கும் பெரியாறு புலிகள் சரணாலயத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால், அந்த யானையோ அங்கிருந்து தப்பித்து தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை எஸ்டேட் பகுதிக்குள் சென்று, அங்கு உள்ள தொழிளாளர்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளை நாசம் செய்து அட்டுழியம் செய்தது. இதனால் அதிகமானோருக்கு படுகாயம் ஏற்பட்டது. தற்போது கம்பம் ஊருக்குள் அரிக்கொம்பம் யானை உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவின் அடுத்த ரன் மெஷின்னாக மாறும் சுப்மன் கில்…, இளம் வயதிலேயே இத்தனை சாதனைகளா??
இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிக்கொம்பன் யானையால் மேலும் உயிர்கள் போக கூடாது என்பதற்காக வனத்துறையினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடிக்கும் வரை கம்பம் ஊரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிதுள்ளனர்.