14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ல் வெளியீடு!!!
டிஎன்பிஎஸ்சி தற்போது 14 தேர்வுகளுக்கு தேர்வு முடிவுகளின் தேதி ஜூன் 8 அன்று வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் நாடு அரசு தேர்வாணையத்தால் 2020 ம் ஆண்டு டிசம்பர் திங்களில் நடத்தப்பட்ட துறை தேர்வுகளின் முடிவுகளும் எந்தெந்த தேர்வுககளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்ற பட்டியலும் கடந்த மே 8ம் தேதி தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன. அப்பட்டியலில் 14 தேர்வுகளை தவிர அனைத்து துறை தேர்வுகளும் இடம் பெற்றிருந்தன.
இப்பொழுது கொரோனா பெருந்தோற்றல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மே 2021 துறை தேர்வுகள் எழுத விரும்பும் தேர்வர்களின் நலன் கருதி இணையத்தில் விண்ணப்பிப்பதற்க்கான கடைசி தேதி ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.