2K கிட்ஸ் காதலால் நடந்த விபரீதம்.. அடுத்தடுத்து விஷம் குடித்த பள்ளி மாணவர்கள் – கடலூரில் பரபரப்பு!

0
2K கிட்ஸ் காதலால் நடந்த விபரீதம்.. அடுத்தடுத்து விஷம் குடித்த பள்ளி மாணவர்கள் - கடலூரில் பரபரப்பு!

தற்போது தமிழகத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் படித்து வரும் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்வது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கடலூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தற்கொலை முயற்சி:

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாணவி தொடர்ந்து அடுத்தடுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அந்த பள்ளியில் படித்த மாணவனும் மாணவியும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், அந்த மாணவி தனக்கு தோல் வியாதி காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவதாக மாணவனிடம் கூறி கவலைப்பட்டுள்ளார்.

மேலும் அதனால் என்னால் உயிர் வாழ முடியாது என்று தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மாணவனிடம் தெரிவித்துள்ளார். மாணவி கூறியதை தாங்க முடியாமல், அந்த மாணவன் நீ இறப்பதற்கு முன்பே நான் இறந்து விடுகிறேன் எனக்கூறி எறும்பு மருந்தை வாங்கி குடித்துள்ளார். இதனை தொடர்ந்து மாணவியும் மீதி இருந்த எறும்பு மருந்தினை தண்ணீரில் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளம் வயதிலேயே மாணவர்கள் எடுக்கும் இது போன்ற விபரீத முடிவுகள் அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்குவதே அனைவர்க்கும் வேதனையாக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here