தமிழகத்தில் அதிகரிக்கும் பதற்றம் – கள்ளக்குறிச்சி மாணவியை தொடர்ந்து மற்றொரு மாணவி தற்கொலை முயற்சி?

0
தமிழகத்தில் அதிகரிக்கும் பதற்றம் - கள்ளக்குறிச்சி மாணவியை தொடர்ந்து மற்றொரு மாணவி தற்கொலை முயற்சி?

சேலம் மேச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை முயற்சி:

அண்மையில் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார் என அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.இதனை ஏற்க மறுத்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் இறங்கினர்.இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் படாதபாடு பட்டு வந்த நிலையில் தற்போது சேலம் மேச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் சேலத்தில் மேலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த மாணவி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலை முயற்சியின் காரணம் குறித்து சேலம் மேச்சேரி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.மேலும் இந்த தற்கொலைக்கும் பள்ளிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அப்பகுதியில் மக்கள் பெரும் வருத்தத்தை அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here