தமிழகத்தில் பிளஸ் 2 மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு – கல்வியமைச்சர் அதிரடி!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு, தற்போது விரைவில் தேர்வு நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் பிளஸ் 2 மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பள்ளி மாணாக்கர்களிடையே மிக அதிகமான அளவில் காணப்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு பள்ளி மாணாக்கர்களின் நலன் கருதி பொதுத்தேர்வை ஒத்திவைத்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவர்களுக்கான செய்முறை தேர்வு திட்டமிடப்பட்டு நடைபெறும் என்றும் அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செய்முறை தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கேள்விகள் எழுந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.2,000 பெறுவதற்கான தேதி அறிவிப்பு !!! – அமைச்சர் பேட்டி

இந்நிலையில் தற்போது இதுகுறித்து கல்வி அமைச்சர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, கொரோனா காலம் என்பதால் மாணவர்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆலோசனையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்து முதல்வர் அறிவுரையின் அடிப்படியில் பொதுத்தேர்வு தேதி குறித்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here