தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதன் காரணமாக இந்த வாரம் முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இதனால் ஆசிரியர்கள் மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் மற்ற வகுப்பை போல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் பொதுத்தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தேர்தலை ஒட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – கதறும் குடிமகன்கள்!!
இந்நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கலாமா என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 9,10 மற்றும் 11ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் கல்லூரிகளுக்கும் வருகிற 31ம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.