தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவுகளின் படி 94.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
+2 தேர்வு முடிவுகள் வெளியாகி 3 வாரங்கள் கடந்த நிலையில் தேர்வு தாள் திருத்தும் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். அதாவது விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை விட கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால் தான் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எதிர்நீச்சல் சீரியலில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.., ஜீவானந்தம் போட்ட மாஸ்டர் பிளான்!!
இதனால் இந்த தேர்வு முடிவுகளில் நடந்த குளறுபடிகளை கண்டறிய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக தான் இப்படி அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.