தாலிபான்களின் கைவசம் சிக்கி தவிக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை இந்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 120 இந்திய தூதரக அதிகாரிகள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மேலும் அந்நாட்டின் அதிபரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நாட்டு மக்கள் தாலிபான்களுக்கு அஞ்சி நடுங்கி நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றனர்.
ஏற்கனவே ஏர் இந்தியா விமானம் 129 பேருடன் இந்தியா வந்தது. இரண்டாம் முறையாக ஏர் இந்தியா விமானம் இந்தியர்களை அழைத்து செல்ல இருந்த பொழுது காபூல் விமான நிலையத்தைதிற்குள் விமானங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதால் ஏர் இந்தியா விமானதால் இந்தியர்களை மீட்க முடியவில்லை.
இந்நிலையில் இந்தியாவின் ராணுவ விமானம் ஆப்கானிஸ்தான் சென்று இந்திய தூதரக ஊழியர்கள் 120 இந்தியர்களுடன் இந்தியா திரும்பியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்