மேட்ரிமோனி தளங்கள் மூலம் பெண்களை குறிவைக்கும் ஆசாமி…12 பெண்கள் பாலியல் வன்கொடுமை!!

0

மும்பையில் மேட்ரிமோனி தளம் மூலம் 12 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக நவி மும்பை போலீஸார், ஒரு நபரை கைது செய்து உள்ளனர்.இந்த வன்கொடுமையை செய்தவர் மகேஷ் என்ற கரண் குப்தா என்பவர். இவர்  மேட்ரிமோனியில் பதிவு செய்யும் பெண்களை குறி வைத்து இந்த வன்கொடுமை நிகழ்த்தியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கரண் குப்தா,  இவருக்கு வயது 37. இவர் ஏறக்குறைய 12 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இயந்திர பொறியியலாளராக  ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் இவர் சில காலங்கள் ஹேக்கராகவும் பணியாற்றி உள்ளார். இந்த அறிவை தவறாக பயன்படுத்தி இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டு உள்ளார்.

மேட்ரிமோனி தளங்களில் பல போலி சுயவிவரங்களை உருவாக்கி, உயர்ந்த  படிப்பு  படித்த பெண்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார். மேலும் அந்த தளங்களில் பெண்கள் தங்களின் சுய விவரத்தில் அளித்திருக்கும் தொலைபேசி எண்களைக் கொண்டு, அவர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி  பாலியல் துன்புறுதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கென அவர் பல்வேறு சிம் கார்டுகளை பல முறை மாற்றி வந்துள்ளார். இதுவரை அவர் 12 பெண்களுக்கு எதிராக இந்த செயலில்  ஈடுபட்டு உள்ளதாக காவல்துறை துணை ஆணையர் சுரேஷ் மெங்கடே கூறியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here