தமிழகத்தில் நிலவும் கோடை வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வெளியில் செல்வதற்கு கூட அச்சமடைந்தனர். இப்படி கடந்த சில வாரமாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் பல பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
உன்னுள் உறைகிறேன்(கல்லூரியின் கதை) – பாகம் 1..,
அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமுடன் இருக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது.