நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பு தினம் தினம் வெளியாகி வண்ணம் உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கூட புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது புதுச்சேரியில் லாபத்தில் இயங்கும் அனைத்து அரசு சார்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.11000 தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.மேலும் கருணை தொகை குறைந்தபட்சமாக ரூ.7000 வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.