தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 11 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
ரிசல்ட் அவுட்
தமிழகத்தில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை பதினோராம் வகுப்புக்கான பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.70 லட்சம் மாணவர்கள் எழுதினார். இதைத்தொடர்ந்து மாணவர்களின் தேர்வு தாள் திருத்தம், மதிப்பெண் பதிவேற்றம் போன்ற பணிகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதை தொடர்ந்து தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கர்ப்பமாக இருக்கும் CWC மணிமேகலை?? அவரே கொடுத்த அப்டேட்!!
இதில் 86.99% மாணவர்களும், 94.36% மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே 7.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேரும், ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர். அதே போன்று திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதத்துடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.