தமிழகத்தில் மாணவிகளுக்கான ரூ.1,000 உதவித்தொகை? அரசு முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் மாணவிகளுக்கான ரூ.1,000 உதவித்தொகை? அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவிகளுக்கான ரூ.1,000 உதவித்தொகை? அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவிகளுக்கான ரூ.1,000 உதவித்தொகை? அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் ரூ.1000 உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில் முதற்கட்டமாக 2½ லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.1,000 உதவித்தொகை:

தமிழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துகொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அரசு பள்ளிகளில் மாணவியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், உயர்கல்வி படிக்க ஊக்குவிக்க வேண்டும் எனபதற்காகவும் அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டம் என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, மாணவிகள் உயர்கல்வி படித்து முடிக்கும் வரைக்கும் மாணவியின் வங்கி கணக்கிற்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவியர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல லட்சக்கணக்கான மாணவியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதனிடையே, மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதியையும் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டிருந்தது.

இதனிடையே, எப்போதிலிருந்து மாணவியரின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வழங்கப்படும் என பெற்றோர்கள், மாணவிகள் என அனைவருமே காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், முதற்கட்டமாக 2½ லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பிறகு படிப்படியாக அனைத்து மாணவியர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த மாதத்தில் இருந்து மாணவியர்களுக்கு உதவித்தொகை வழங்க இருக்கிறது என்பதற்கான தகவல் தற்போது வரைக்கும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here