திருவாருர் மாவட்ட ஆட்சியருக்கும் காட்டூர் கிராம ஊராட்சி தலைவருக்கும் பார்த்து சான்றிதழ் வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மு.க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்…
கொரோனா தொற்றின் பரவல் காரணமாக மக்கள் அனைவரும் தத்தளித்து வருகின்றனர், இந்நிலையில் கொரோனாவிற்கான மருந்துகள் இதுவரை இன்னும் கிடைக்கவில்லை. இதற்காக மக்கள் அனைவருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தி வருகிறது அரசு. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு பொது இடங்கள் என பல இடங்களில் முகாம் அமைத்து மக்களுக்கு தடுப்பூசிகளை போடு வருகின்றன. இதில் மக்கள் சிலர் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள பயந்து வருகின்றனர், இடையில் ஒரு சிலர் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு உயிரிழந்தனர் என செய்திகள் வந்தன.
ஆனால் அரசு மக்களை தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுங்கள் எதுவும் ஆகாது பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று பல வடிவில் கூறிவருகிறது. ஆனால் மக்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அஞ்சி வருகிறார்கள், இதற்கிடையில் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் காட்டூர் என்னும் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர், இவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டது மற்ற மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறது. இவர்களது இந்த செயலை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்ட ஆட்சியரான ப.காயத்ரி கிருஷ்ணன் மாற்றும் காட்டூர் கிராமத்தின் ஊராட்சி தலைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்