தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டினால் அதற்கான அனுமதி கட்டணம் நூறு சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று முதல் 1000 சதுர அடிக்கும் மேல் வீடு கட்டுபவர்களுக்கு அனுமதி கட்டணம் 100% உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவர்களுக்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று பழைய கட்டடங்களை இடிப்பதற்கான அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.