கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் 100 நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தால் கிராம மக்கள் பலரும் பயனடைந்து வரும் நிலையில் அவர்களுக்கு பல சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சமீபத்தில் கூட 100 நாள் திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் பல கோடி மக்கள் பயன்பெற்று வரும் நிலையில், 42 லட்சம் பணியாளர்கள் இன்னும் வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காமல் உள்ளனர். இதனால் ஆதாரை இணைக்காமல் உள்ளவர்கள் இணைத்தால் மட்டும் சம்பளம் வழங்கப்படும் என மத்திய ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்கே ஏற்காதே..,வீழும் சூரியனே..,கிரிக்கெட்டில் சகாப்தத்தை முடித்த டேவிட் வார்னர்!!
மேலும் நேற்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் இவரிடம் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 100 நாள் வேலை திட்டம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்தது மட்டுமல்லாமல் அதற்கு விளக்கமும் அளித்துள்ளார் மத்திய ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர்.