அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 மணிநேர நிகழ்ச்சிக்காக ரூ. 100 கோடி செலவு செய்யும் இந்திய அரசு..!

0

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலினா வரும் பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகின்றனர். குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். 3 மணி நேரம் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்ச்சிக்காக ரூ. 100 கோடி செலவு செய்யப்பட உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மைதானம்..!

இந்தியா வரும் டிரம்ப் குஜராத்தில் கட்டப்பட்டு உள்ள மிக பிரமாண்டமான மைதானத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் அன்று நடைபெறும் கலைநிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன.

குடிசைப் பகுதியை மறைத்து கட்டப்படும் 7 அடி சுவர் – டிரம்ப் வருகையால் புதுப்பொலிவு பெரும் குஜராத்..!

டிரம்ப் செல்லும் பாதையில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் ரூ.80 கோடி, பாதுகாப்பிற்காக ரூ.12 முதல் 15 கோடி, விழாவிற்கு வரும் ஒரு லட்சம் விருந்தினர்கள் வந்து செலவதற்காக ரூ.7 முதல் 10 கோடி, நகரை மலர்கள் உள்ளிட்டவைகளால் அழகுபடுத்த ரூ.6 கோடி, மோடி-டிரம்ப் வரும் பாதையில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த ரூ.4 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here