தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 10 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வை 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள், 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 மூன்றாம் பாலினத்தவர் எழுதினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 9.40 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அதில் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வுக்கான ஆங்கில படத்தில் 89 பேரும், அறிவியல் படத்தில் 3585 பேரும், சமூக அறிவியலில் படத்தில் 320 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதிலும் கணித படத்தில் மட்டும் அதிகபட்சமாக 3,649 Centuary அடித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அடை மழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிவிப்பு!!
தமிழ் மொழி படத்தில் யாருமே 100 மதிப்பெண் எடுக்க வில்லை. இந்த தேர்வு முடிவுகளின் படி தமிழகத்திலே பெரம்பலூர் ,மாவட்டம் தான் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், அதற்கு மே 23 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.