பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி- ஐந்து நாட்களில் வழங்கப்படும் உணவுகள் லிஸ்ட் வெளியிடு!

0
பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி- ஐந்து நாட்களில் வழங்கப்படும் உணவுகள் லிஸ்ட் வெளியிடு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் காலையில் என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என லிஸ்ட் வெளியாகியுள்ளது.

காலை சிற்றுண்டி:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிகமான ஏழை எளிய மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்கள் ஒரு வேளையாவது மன திருப்தியுடன் உணவு அருந்தட்டும் என்று கடந்த 1957ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இலவச உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து மதிய உணவு திட்டத்தை எம்ஜிஆரும் மற்றும் உணவுடன் சேர்த்து முட்டை திட்டத்தையும் கருணாநிதி அவர்களால் அமல்படுத்தப்பட்டது. தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசு பள்ளியில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.

தற்போது என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதாவது, வாரத்தில் திங்களும், வியாழக்கிழமையும் உப்புமா வகையுடன் காய்கறி சாம்பாரும், செவ்வாய் கிழமை காய்கறி கிச்சடியும், புதன்கிழமை பொங்கல் காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் கேசரியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் அளவு 150 முதல் 200 கிராம் என்றும், சாம்பார் அளவு 200 கிராம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here