தொழிலாளர்களுக்கு 1 மாதத்திற்கான இ – பாஸ் – தமிழக அரசு முடிவு..!

0

ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழகத்தில் இருந்து பணிக்கு செல்வோருக்கு ஒரு மாதத்திற்கான இ – பாஸ் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

1 மாதத்திற்கு இ – பாஸ் வழங்க அனுமதி..!

ஆந்திராவின் உள்ள தொழிற்சாலைகளில் தமிழகத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தினமும் தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்று வருவதால் அவர்களுக்கு தினசரி இ – பாஸ் வழங்காமல் ஒரு மாதத்திற்கு இ – பாஸ் வழங்கும்படி தொழிற்சாலை நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதை ஏற்று தொழிற்சாலைகள் சார்பில் விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான இ – பாஸ் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது எனவும், தொழிற்சாலை நிர்வாகம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களை அழைத்து வர நிர்வாகமே வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100ரூபாய் லஞ்சம் கொடுக்கததால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

மேலும் இருசக்கர வாகனங்களுக்கு குறைந்த அளவே அனுமதி அளிக்கப்படும் எனவும், தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் தினசரி ஒரு மாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்ல மாதம் தோறும் இ – பாஸ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்திற்கான இ – பாஸ் பெறுவோர் ஒரு மாதம் முடிந்ததும் அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here