இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி செலுத்தி மத்திய சுகாதாரத்துறை சாதனை படைத்துள்ளது.
கொரோனவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே ஆயுதமாக விளங்கும் நிலையில் மத்திய அரசு இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. ததற்போது கோவிஷீல்ட் (Covishield) மற்றும் கோவாக்சின் (Covaxin), ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாட்டில் நேற்று, (ஆக்ஸ்ட் 27,2021) மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்துள்ளது சுகாதாரத்துறை. உலக அளவில் சீனாவில் கடந்த மாதம் ஒரே நாளில் 2.08 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன. சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை தற்போது இந்தியா பிடித்துள்ளது.
தற்போது வரை இந்தியா முழுவதிலும் இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நாளில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 28 லட்சம் பேருக்கும், கர்நாடகாவில் 10 லட்சம் பேருக்கும், தமிழ்நாட்டில் 3.73 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்