12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இலவசமாக தெரிந்து கொள்ள கரூர் மாவட்ட நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ரிசல்ட்
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை பல லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் இவர்களுக்கான ரிசல்ட் வரும் எட்டாம் தேதி வெளியாக உள்ளது. இதனால் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது மட்டும் அல்லாமல் இந்த முடிவை வைத்து தான் அடுத்து அவர்களின் உயர் கல்வி படிப்பை தொடர முடியும் என்பதால் மாணவர்களை விட பெற்றோர்கள் தான் ரிசல்ட்டை பார்க்க ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்ட அலுவலர் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்கள் இலவசமாக ரிசல்ட்டை பார்க்க சிறப்பு ஏற்பாடு ஒன்றை செயல்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 30,122 பள்ளிகளில் காலை உணவு திட்டம்…, முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!
அதாவது கரூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தின் இணையதள வாயிலாக பிளஸ் டூ மாணவர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் பட்டியலை இலவசமாக பார்க்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும் என கரூர் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கரூர் மாவட்ட மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.